Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சார்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் ஆா்.சி.எச்.ரகம்-712 மூட்டைகள், டி.சி.எச். ரகம் 302 மூட்டைகள், கொட்டு 7 மூட்டைகள் என மொத்தம் 1021 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஆர்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6,269 முதல் அதிகபட்சமாக ரூ. 7502 வரை விற்பனையானது. டி.சி.எச்.ரகம் குறைந்தபட்சமாக ரூ. 7161 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7795 வரை விற்பனையானது. கொட்டு குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3900 ம் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.4900 க்கும் ஏலம் மூலம் விற்பனையானது. மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது